திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை

திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை (Tiruvidaimarudur P. S. Veerusamy Pillai) தென்னிந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாதசுவர வாத்திய இசைக் கலைஞர் ஆவார்.

பிறப்பு: நவம்பர் 9, 1896
இறப்பு: ஏப்ரல் 19, 1973

நாதசுவர கலைஞராக

திருப்பாம்புரம் நடராஜ சுந்தரம் பிள்ளையின் மாணாக்கரான இவர் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையுடன் ஜோடியாக நாதசுவரம் வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்.1
பாரி வகை நாதசுவரத்தைப் பயன்படுத்திய வீருசாமி பிள்ளை, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எனப் பல நாடுகளிலும் கச்சேரிகள் செய்தார்.2
அவர் மைசூர், திருவிதாங்கூர், புதுக்கோட்டை ஆகிய சமஸ்தான அரசவைகளில் நாதசுவர கச்சேரிகள் செய்தார்.
அது மட்டுமின்றி தில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களிலும், திருப்பதி தேவஸ்தானம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகிய சமய தலங்களிலும் நாதசுவரம் வாசித்தார்.
அகில இந்திய வானொலியின் தில்லி, ஐதராபாத், சென்னை ஆகிய வானொலி நிலையங்களில் முதல் நிலைக் கலைஞராகத் திகழ்ந்தார்.3
இசை ஆர்வம் காரணமாக ஜி. என். பாலசுப்பிரமணியம் சகுந்தலை திரைப்படத்தில் காம்போதி ராகத்தின் அனைத்து லட்சணங்களையும் சேர்த்து பாடிய "எனை மறந்தனன்" என்ற விருத்தம் வரும் காட்சியை பல தடவைகள் பார்த்தார்.4

நாதசுவர இசை ஆசிரியராக

சுவாமிமலை, பழனி ஆகிய இடங்களில் அமைந்திருந்த நாதசுவர பயிற்சிப் பள்ளிகளில் முதல்வராகப் பணியாற்றினார்.
வானொலி நிலையங்களில் இசைக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் முதன்மைத் தேர்வாளராகவும் பணியாற்றினார்.5

மாணாக்கர்

இவரது மருகர் வயலின் வித்துவான் மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளையும்6 , இவரது சகோதரரின் மகனும் நாதசுவர வித்துவானுமாகிய இசைப்பேரறிஞர் திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜாவும்7 இவரது மாணாக்கராவர்.

விருதுகளும் பாராட்டுகளும்


  1. டி. என். ராஜரத்தினம் பிள்ளை, நாச்சியார்கோவில் ராகவபிள்ளை, [ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகியோர் இவரைப் பாராட்டியுள்ளார்கள்.8
  2. கலைஞர் மு. கருணாநிதி இவரின் தீவிர ரசிகர்.9
  3. திருவாவடுதுறை ஆதீனம் ஆஸ்தான வித்துவான்.10
  4. திருவிதாங்கூர் சமஸ்தான ஆஸ்தான வித்துவான்.11
  5. சங்கீத கலாநிதி விருது, சென்னை மியூசிக் அகாதமி 1961 ஆம் ஆண்டு வழங்கியது.12
  6. இசைப்பேரறிஞர் விருது, சென்னை தமிழிசைச் சங்கம் 1959 ஆம் ஆண்டு வழங்கியது.13
  7. சங்கீத நாடக அகாதமி விருது, இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி 1966 ஆம் ஆண்டு வழங்கியது.14


உசாத்துணை


பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் என்ற நூல்.
வெளியிட்டவர்கள்: மெய்யப்பன் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108 
தொலைபேசி: +91 44 25361039


மேற்கோள்கள்

1 **பி. எஸ். வீருசாமி பிள்ளை**
2 காலவெள்ளத்தால் கரைந்துபோன கலைஞர்கள்
3 நாதசுவர மேதையின் சிலை பொது இடத்தில் வைக்கப்படுமா?
4 ஜி. என். பி. நூற்றாண்டு விழா
5 நாதசுவர மேதையின் சிலை பொது இடத்தில் வைக்கப்படுமா?
6 Felicity with the fiddle
7 திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா
8 நாதசுவர மேதையின் சிலை பொது இடத்தில் வைக்கப்படுமா?
9 நாதசுவர மேதையின் சிலை பொது இடத்தில் வைக்கப்படுமா?
10 நாதசுவர மேதையின் சிலை பொது இடத்தில் வைக்கப்படுமா?
11 நாதசுவர மேதையின் சிலை பொது இடத்தில் வைக்கப்படுமா?
12 Recipients of Sangita Kalanidhi
13 இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்
14 Sangeet Natak Akademi Puraskar (Akademi Awards)

No comments:

Post a Comment